Wednesday, October 30, 2013

ஷிர்டி சாய்பாபா வாழ்க்கை சுருக்கம்

ஷிர்டி சாய்பாபா வாழ்க்கை சுருக்கம்

ஷிர்டி சாய் பாபாவின் தாய் தந்தை யாவர்சொந்த ஊர் எது ? இவை எதுவும் யாரும்அறிந்ததில்லை..
சாயி மகான் 1854 ஆம் ஆண்டுதனது பதினாறாவது வயதில் ஷீரடிக்கு வருகை புரிந்தார்.அதனால் சில தினங்களில் அவர் அங்கிருந்து கிளம்பி சென்றார்அவர் எங்கு சென்றார்என்பதை யாரும் அறியவில்லை..

சில ஆண்டுகள் கழிந்தனசாந்த் பட்டேல் என்பவர் ஒருமுறை காட்டு வழியில் சென்றுகொண்டிருந்தபோதுபக்கீர் போல இருந்த பாபாவை கண்டார்அவரிடம்இளைப்பாறும்படி பாபா கூறினார்.
அவர்கள் இருவரும் புகைபிடிக்க நெருப்பு தேவையாக இருந்ததுபாபா தன் கையிலிருந்தசுத்தியால் நிலத்தை தோண்ட நெருப்பு வந்ததுபிறகு கைத்தடியால் பூமியின் மீது அடிக்கதண்ணீர் வந்தது.
மேலும் சில மாதங்களுக்கு முன் காணமல் போன சாந்த் பட்டேலின் குதிரை இருக்கும்இடத்தையும் பாபா சரியாக கூறினார்.. பாபாவின் மகிமையை சாந்த் பட்டேல் புரிந்துகொண்டார்..

சாந்த் பட்டேல்தன் வீட்டிற்கு அழைத்து சென்றார்சில நாட்கள் பாபாவை தன்வீட்லேயே தங்க வைத்து உபசரித்தார்.. சாந்த் பட்டேல் தன் மைத்துனரின் மகனதுதிருமண நிகழ்ச்சிக்காக ஷிர்டி வந்த போதுபாபாவையும் தன்னுடன் ஷிர்டிக்கு அழைத்துவந்தார்.

பாபாவின் ஒளிபொருந்திய தோற்றத்தை கண்ட மஹல்சாபதி என்னும் பூசாரிஅவரைசாயி என்று அழைத்தார்.
"சாயிஎன்றால் பாரசீகத்தில் "சுவாமிஎன்று பொருள். "பாபாஎன்றால் இந்தியில் "அப்பா"என்று பொருள்.
இரண்டும் இணைந்து சாயிபாபா என்ற திருப்பெயரே நிலைத்து விட்டது..

சாயிபாபா ஷிர்டியிலேயே தங்கிவிட தீர்மானித்தார்ஷிர்டியில் பழமையான மசூதிஒன்று இருந்ததுஅதன் அருகிலுள்ள வேப்ப மரத்தின் அடியில் பாபா அமர்ந்தார்பாபாஅமர்ந்திருந்த வேப்ப மரத்தின் இலைகளில் அதன் இயல்பு கசப்பு சுவை மாறியது..

ஷிர்டி மக்கள் பாபாவிடம் நீங்கள் யார் ? என்று கேட்டார்கள்..
அதற்கு அவர்நானே அல்லா !, நானே சங்கரன் ! நானே ஸ்ரீ கிருஷ்ணர் ! நானே அனுமன் !என்று கூறினார்.
ஆமாம் அவர் இப்பூமியில் இறைஅம்சம் கொண்டவராகவே அவதரித்தார்..

பல ஆண்டுகள்ஒரு யோகியை போலவே வாழ்ந்த பாபாபிச்சை எடுத்தே உண்டார்.தனது மகிமையால் நோயுற்றவர்களின் நோயை குணமாக்கினார்பாபாவின் புகழ் சுற்றுவட்டாரங்களில் பரவ தொடங்கியதுபல ஞானிகள் வந்து பாபாவை சந்தித்தனர்.அவர்கள் பாபாவின் தெய்வீக தன்மையை தாங்கள் அறிந்ததோடு அதை உலகிற்கும்எடுத்து கூறினர்.

கங்காகீர் என்னும் கர்வமிக்க ஞானி பாபாவை சந்தித்துபாபாவின் மகிமையைசோதித்தார்பாபா தன் உள்ளங்கையிலிருந்து கங்கையை பெருக செய்யகங்காகீர் தன்தவற்றை உணர்ந்தார்..

பாபா தான் தங்கியிருந்த துவாரகாமாயீ என்னும் மசூதியில் விளக்குகள் ஏற்றி வைப்பார்.இரு எண்ணெய் வியாபாரிகள் விளக்கிற்கான எண்ணையை கொடுத்து வந்தனர்.
ஒருநாள் பாபாவின் ஆற்றலை சோதிக்க எண்ணிய அவர்கள் எண்ணெய் தர மறுத்தனர்..பாபா தண்ணீரை ஊற்றி விளக்குகளை எரித்தார்இந்நிகழ்ச்சியால் பாபாவின் புகழ்அப்பகுதி முழுவதும் பரவியதுபாபாவை தேடி பக்தர்கள் வர தொடங்கினர்..

ராதாகிருஷ்ணமாயி என்னும் பெண்மணி பாபாவின் இருப்பிடத்தை கவனித்துகொண்டதோடுஉணவும் சமைத்து வந்தார்பாபாவை தேடி எத்தனை பக்தர்கள்வந்தாலும்அவர்கள் அனைவரும் வயிறார உண்ணும்படி அந்த உணவை பெருகசெய்தார் பாபா..

தெய்வீக மகிமை நிறைந்த பாபா குழந்தைகளிடம் குழந்தையாகவே நடந்து கொண்டார்..சிரிக்க சிரிக்க பேசி குழந்தைகளை மகிழ செய்தார்..

பாபா பஜனையையும்பாடல்களையும் விரும்பினார்பக்தர்களிடம் பஜனைகளையும்,பாடல்களையும் பாடும்படி உற்சாகமூட்டினார்..

ஏழைகளின் துயரங்களை கண்டு மனம் பொறாதாவர் பாபா.. ஒரு தாயை போலஏழைகளிடம் நடந்து கொண்டார்.
தொழுநோயாளிகள் மீது இரக்கம் கொண்டிருந்தார்அவர்களது உடலிலுள்ள புண்களைதன் கையாலேயே கழுவிஅவர்களுக்கு மருத்துவம் செய்தார்.

பாபா சாஸ்திரங்களையும்ஐயமற கற்று உணர்ந்திருந்தார்பகவத் கீதைகுர்ஆன்போன்றவற்றின் சுலோகங்களுக்கு மிக அற்புதமான விளக்கங்கள் அளித்துபண்டிதர்களைக்கூட வியப்படைய செய்தார்.

பாபா மதங்களை கடந்து நின்றார்துவாரகாமாயீ மசூதியில் பாபா வீற்றிருந்தார்மக்கள்அவரை சாயி மகாராஜ் என்று போற்றி கொண்டாடினர்பாபா மக்களுக்கு கூறியபொதுவான உபதேசம் நிஷ்டா (நம்பிக்கைவும்ஸபூரி (பொறுமையும்ஆகும்..

தன்னை நாடி வந்த நோயாளிகளுக்கெல்லாம் உதி விபூதியையேபிரசாதமாக தந்து,அவர்களின் நோயை நீக்கியவர் பாபா.
வாழ்வில் பொறுமையும்தன் மீது நம்பிக்கையும் கொண்ட அன்பர்களுக்கு அவர்எப்போதும் துணை நிற்கிறார்..

துவாரகாமாயீயில் அன்று பாபாவால் மூட்டப்பட்ட நெருப்பு இன்றும் அணையாமல்இருக்கிறதுஅந்நெருப்பு குண்டத்திலிருந்து எடுக்கப்படும் உதியே இன்றும் பக்தர்களின்பிரசாதமாக விளங்குகிறதுபாபா தன் பொன்னுடலோடு இப்பூவுலகில் வாழ்ந்தகாலத்தில் எண்ணிலடங்காத அற்புதங்கள் புரிந்தார்..

சாயிமகான் 1918 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ஆம் நாள் ஸ்தூல உடலை உகுத்தார்

Friday, November 2, 2012

HOSPITAL LODGE BEDSHEETS

                               SRI JEYANTHI TEXTILES

               VIVEKANANTHA NAGAR , SENGUNTHAPURAM , 12th CROSS

                                        KARUR - 639002 .